குழந்தைகளுக்காக ............

குழந்தை இறைவன் கொடுத்த வரம் ,அந்த குழந்தைகளை ராமனாக வளர்ப்பதும் , ராவணனாக ஆக்குவதும் பெற்றோரான உங்கள் கையில் தான் இருக்கிறது ,

இரண்டாவது குழந்தை படும் பாடு 4:33 AM


முதல் குழந்தையிடம் இருந்து இரண்டாவது குழந்தையை காப்பாத்தி கொள்ளுங்கள்.


எல்லோருக்கும் கல்யாணம் ஆனதும் பிறக்கும் முதல் குழந்தையின் மேல் பாசத்தை கொட்டி சிலர் ரொம்ப செல்லம் கொடுத்து வளர்கின்றனர்.


சில வருடம் முன்று நான்கு வருடம் சென்றதும் அடுத்த குழந்தை பெறும் போது, முதல் குழந்தையிடம் உள்ள பாசம் குறைகிறது. நீங்கள் பாசத்தோடு தான் இருப்பீர்கள் ஆனால் குழந்தை அப்படி நினைத்து கொள்ளும்
எப்படியும் முதல் குழந்தைக்கு பொறாமை வரும். புது டிரெஸ் வாங்கினால், பால் பாட்டில் வாங்கினால் கூட பொறாமையா இருக்கும்.




இது இப்ப லேட்டஸ்டா நடந்து கொண்டு இருக்கு.


யாரும் இல்லாத போது தூளியில் படுத்திருக்கும் குழந்தை மண்டைய இடிச்சி விடுவது, போய் கடித்து வைப்பது இது போல் எல்லாம் செய்கிறார்கள்.

என்னேரமும் கண் கொத்தி பாம்பு போல் பிள்ளைகளை கவனிக்க வேண்டியதா இருக்கு இப்ப உள்ள பிள்ளைகளை.
மடியில் வைத்து கொஞ்சினால் கூட அவர்களுக்கு பிடிக்காது. ஏதாவது சாமானை தூக்கி அடிப்பார்கள்.
எனக்கு தெரிந்த ஒரு இடத்தில் பொறாமையால் அவர்கள் ரொம்ப காலமாக பேசாமல் கல்யாணத்திற்கு பிறகு தான் பேசி இருக்கிறார்கள்.இதேல்லாம் கேள்வி படும் போது எல்லோருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கும்.

அதே நேரம் முதல் குழந்தையையும் சரியான முறையில் ஆதரியுங்கள்.
என்ன வாங்கி கொடுப்பதாக இருந்தாலும் முதல் குழந்தைக்கும் சேர்த்து வாங்கி கொடுங்கள்.
பள்ளி செல்லும் பிள்ளையாக இருந்தால் ஒரளவிற்கு புரிந்து கொள்வார்கள் எடுத்து சொல்லுங்கள்.


இது போல் நிறைய‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.




நன்றி : இணையம்

0 கருத்துரைகள்:

Post a Comment